May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்திய 6 பேர் கைது

1 min read

From Tirupati to Chennai 6 arrested for kidnapping sheep

25.10.2021

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் சென்னைக்கு கடத்தி செல்ல முயன்ற 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

செம்பரம் கடத்தல்

திருப்பதி அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை டி.எஸ்.பி. முரளிதரன் தலைமையிலான போலீசார் திருப்பதி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வடமாலப்பேட்டை அஞ்சாரம்மா கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில் ஏற்றிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரில் செம்மரங்களை ஏற்றிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

6 பேர் கைது

விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது29), திருவள்ளூர் மாவட்டம் பாகசாலை கிராமத்தை சேர்ந்த சரவணன் (34), பள்ளிப்பட்டை சேர்ந்த ரமேஷ், சென்னை திருவேற்காட்டை சேர்ந்த ரமேஷ் (47), சஞ்சீவி (27), ராக்கி (29) மற்றும் ஸ்ரீஜித் (43) என்பது தெரிய வந்தது.

இவர்கள் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செம்மர கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 பைக், ஒரு வேன், காருடன் 11 செம்மரங்களை பறிமுதல் செய்து செம்மரக் கடத்தலில் முக்கிய புள்ளி யார்? சென்னையில் எந்த இடத்திற்கு செம்மரங்களை கடத்தி செல்கின்றனர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.