தமிழகத்தில் இன்று 1,075 பேருக்கு கொரோனா; 12 பேர் சாவு
1 min readCorona for 1,075 people in Tamil Nadu today; 12 dead
27.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,090-ல் இருந்து 1,075ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,315பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,21,553 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 1,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 26,98,493 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 628பேர் ஆண்கள், 447 பேர் பெண்கள். இன்று 1,315 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,50,145 ஆக உயர்ந்துள்ளது.
12 பேர் சாவு
தமிழகத்தில் 12 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,060 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 141ஆக இருந்த நிலையில் இன்று 139ஆக குறைந்துள்ளது.
கோவையில் 125 பேருக்கும் செங்கல்பட்டில் 90 பேருக்கும், ஈரோட்டில் 71 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லையில் இன்று 22 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும் கொரேனா கண்டறியப்பட்டது.