March 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 1,009 பேருக்கு கொரோனா; 19 பேர் சாவு

1 min read

Corona for 1,009 people in Tamil Nadu; 19 deaths

31.10.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,021ல் இருந்து 1,009 ஆக சற்று குறைந்துள்ளது. 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,183 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,23,701 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 1,009 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,02,623 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 586 பேர் ஆண்கள், 423 பேர் பெண்கள். தமிழகத்தில் 1,183 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,55,015 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,116 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக இருந்த நிலையில் இன்று 114 ஆக குறைந்துள்ளது.

கோவையில் 119 பேருக்கும், செங்கல்பட்டுக்க 83 பேருக்கும், ஈரோட்டில் 75 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 11பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடிக்கு 11 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.