April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

நவம்பர் மாத ராசி பலன்கள்(2021)

2 min read

Rasi Palan for November 2021

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் முக்கிய கிரகங்களில் சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். அதோடு குரு 13-ந் தேதிக்கு பிறகும், புதன் 17-ந் தேதிக்கு பிறகும் நன்மை கொடுப்பார். இதனால் மாதத் பிற்பகுதியில் அதிக நற்பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்
குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மகர ராசியில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை தந்துகொண்டிருந்தார் அவர் பொருள் இழப்பையும், வறுமையயும் தந்திருப்பார். சிலர் பதவி இழக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் 13-ந் தேதி குரு 11-ம் இடமான கும்ப ராசிக்கு வருகிறார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
குடும்பம்: சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். 13-ந் தேதிக்கு பிறகு சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். புதனால் இருந்து வந்த பிரச்சினை,கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு முதலியன 17-ந் தேதிக்கு பிறகு மறைந்து ஒன்று சேருவர். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தாராளமாக கிடைக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 12,13,14-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 24,25,26-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 17,18-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். மாத பிற்பகுதியில் பதவி உயர்வு காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். 10,11-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரம்: பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். 16-ந் தேதிக்கு பிறகு அரசிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம். அதே போல் வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆனால் குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.2,3,29,30-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 15,16,19,20,21-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்:முன்னேற்ற பாதையில் செல்வர். சமூகநல சேவகர்களுக்கு புகழ் வளர்முக மாகவே இருக்கும். அரசியல்வாதிகள் சீரான பலனையே காணலாம். பிரதிபலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். 13-ந் தேதிக்கு பிறகு அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை உதவிகரமாக இருக்கும்.
விவசாயிகளுக்கு வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. பாசிபயறு துவரை, கொண்டைக்கடலை , மஞ்சள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். 13-ந் தேதிக்கு பிறகு கால்நடை வகையில் நல்ல வருவாய் கிடைக்கும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.17-ந் தேதிக்கு பிறகு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.13-ந் தேதிக்கு பிறகு நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். சகோதரர்களால் மேன்மை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.4,5 ஆகிய தேதிகள் குதூகலமான நாட்களாக அமையும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 22,23-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல்நலம்: பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.அலைச்சல், அவப்பெயர் ,வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 16-ந் தேதிக்கு பிறகு மறையும். 8,9,27,28,-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.6,7-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 4,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, பச்சை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். 2,3,4,5,10,11,12,13,14,17,18,22,23,28,29 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: தினமும் காலையில் சூரிய வழிபடுங்கள். ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். மேலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது துர்க்கை கோவிலுக்கு சென்று வாருங்கள்.செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! செவ்வாய்,சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். அதோடு குரு 13-ந் தேதி வரையிலும், சூரியன், புதன் 16-ந் தேதி வரையிலும் நற்பலனை கொடுப்பார்கள். வசதி வாய்ப்புகள் மேம்படும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும்.புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. 16-ந் தேதிக்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும்.
குரு 9-ம் இடத்தில் இருந்து எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தருவார். அவர் 13-ந் தேதி 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது.பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன்மூலம் எந்த இடையூறையும் உடைத் தெறிந்து முன்னேற்றம் காணலாம்.
குடும்பம்: வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் மாத முற்பகுதியில் நடைபெறலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கணவன் மனைவி இடையே அன்பு நீடித்தாலும் 16-ந் தேதிக்கு பிறகு கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். 15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 1,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. எனவே அப்போது அதிக நெருக்கம் வேண்டாம். 19,20,21-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள்.
உத்தியோகம்: பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய வாகனம் வாங்கலாம். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றத்தை காணலாம். முக்கிய கோரிக்கைகளை 16-ந் தேதிக்குள் கேட்டு நிறைவேற்றிக் கொள்ளவும். அதன்பின் படிப்படியாக வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். 12,13,14-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வியாபாரிகள்: உழைப்புக்கு தகுந்த முன்னேற்றம் காண்பர். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. தடைகள் அகலும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.16-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். 4,5-ந் தேதிகளில் அதிக லாபம் கிடைக்கும். 17,18,22,23-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.
கலைஞர்கள்: தொடர்ந்து ஸ்திர தன்மையில் இருப்பர்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காணகலாம். சமூகநல சேவகர்கள் பணியில் திருப்தி காண்பர்
விவசாயிகள் பாசி பயறு நெல், கோதுமை, எள், துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். .அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 16-ந் தேதிக்கு பிறகு கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.6,7-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். 22,23-ந் தேதிகளில் பொன்,பொருள் வாங்கலாம்.
உடல் நலம்: 16-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.2,3,10,11,29,30-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 8,9-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை.வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 3,5 ம் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். சிவப்பு,வெள்ளை அனுகூலம் தரும் நிறங்கள்.4,5,6,7,12,13,14,15,16,19,20,21,24,25,26,ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: ஆஞ்சநேயரை வணங்கி வரவும். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். 16-ந் தேதிக்கு பிறகு தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். புதன் கிழமை குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் கேது மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். மேலும் 13-ந் தேதிக்கு பிறகு குருவும், 16-ந் தேதிக்கு பிறகு சூரியனும், புதனும் சாதகமான இடத்திற்கு வருகிறார்கள். இதனால் தடைகள் படிப்படியாக விலகி காரிய அனுகூலம் எளிதாகும். பின்தங்கிய பொருளாதார நிலை சீர்படும். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்படையும்.
குருவால் பொருளாதாரத்தில் திடீர்சரிவுகள் ஏற்பட்டிருக்கும். மனவேதனை அதிகமாக உங்களைவாட்டியிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண்விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் 13-ந் தேதி குருபகவான் 9-ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் படிபடியாக மறையும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும்.
குடும்பம்:அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். 16-ந் தேதிக்கு பிறகு கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். செல்வாக்கு அதிகரிக்கும். 22,23-ந் தேதிகளில் சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். 2,3,29,30-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண் பகை வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். அதேநேரம் 17,18-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்: பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் 13-ந் தேதிக்கு பிறகு வளர்ச்சி காணலாம். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு காண்பர். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். 15,16-ந் தேதிகள் சிறப்பான காலமாக இருக்கும்.
வணிகம்: உங்கள் முயற்சிகயில் இருந்து வந்த தடைகள் மற்றும் அலைச்சல் மறையும்.16-ந் தேதிக்கு பிறகு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். இதனால் லாபம் அதிகரிக்கும்.தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர்.6,7-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் வருவாய் கிட்டும்.19,20,21,24, 25,26-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பொதுநல சேவகர்கள் அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும். புகழ்,பாராட்டுக்கு எந்த பங்கமும் வராது. 4,5-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
விவசாயம்: வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருவாய்க்கு குறை இருக்காது. 13-ந் தேதிக்கு பிறகு பயறு வகைகள், நெல், கொள்ளு, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்கள்: பொதுவாக முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்த மாதத்தை பொறுத்த வரை 13-ந் தேதிக்கு பிறகு குரு சாதகமாக இருப்பதால் ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
பெண்கள்: குதூகலம் ஏற்படும். உறவினர்களால் உதவி கிடைக்கும்.13-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 1,27,28-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.8,9-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து ,விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.15-ந் தேதிக்கு பிறகு சிறப்பாக இருக்கும் மருத்துவச் செலவு குறையும். 12,13,14-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.10,11-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 6,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு,16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம்,பச்சை நலம் தரும் நிறங்கள்.1,6,7,8,9,15,16,17,18,22,23,27,28 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு:பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம். செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம்.16-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியதரிசனம் செய்யுங்கள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் ராகுமாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். மேலும் குரு 13-ந் தேதி வரையும், புதன் 16-ந் தேதி வரையும் நன்மை தருவார்கள். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில்தான உள்ளன. எந்த கிரகத்தால் எந்த பிரச்சினை வந்தாலும் அதை ராகு முறியடித்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார். பணப்புழக்கம் இருக்கும். செல்வாக்கு குறையாது. மதிப்பு மரியாதை சிறப்படையும். அவ்வப்போது சிற்சில தடைகளை சந்தித்தாலும் இறுதியில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.
குருவால் உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும். வீடு-மனை வாங்கி இருப்பீர்கள்.அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம்.இந்த நிலையில் 13-ந் தேதி குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார். என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.
குடும்பம்: பொன், பொருள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். மாத முற்பகுதியில் பொருள் சேரும்.கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 13-ந் தேதிக்கு பிறகு சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும்.4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். அதே நேரம் 19,20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 24,25,26-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பபான நிலையில் இருப்பர். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 16-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பிறகு உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு.வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். 17,18-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வியாபாரிகள்: நல்ல பணப்புழக்கத்துடன் காணப்படுவர். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண்கள் வகையில் இருந்த தொல்லைகள் 16-ந் தேதிக்கு பிறகு மறையும் ஆனால் அதன்பிறகு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.8,9-ந் தேதிகளில் எதிர்பாராத வருவாய் கிடைக்கும். 22,23,27,28-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்:புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சமூகநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தில் இருப்பர். அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். 13-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. குறிப்பாக நெல், பாசிபயறு,உளுந்து கொண்டைக்கடலை , மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.பசுவளர்ப்பில் போதிய வருவாயை பெறலாம்.16-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 16-ந் தேதிக்கு பிறகு வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். 2,3,29,30-ந் தேதிகளில் பொன், பொருட்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும்.10,11-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: செவ்வாயால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.6,7,15,16-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். வயிறு பிரச்சினை வரும். 12,13,14-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 4,8 சிறப்பை தரும் எண்கள். நீலம்,பச்சைஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் ஆகும்.8,9,10,11,17,18,19,20,21,24,25,26,29,30.ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். காக்கைக்கு அன்மிடுங்கள். தினமும் காலையில் சூரியனை வழிபட்டு வாருங்கள்.ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.13-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள்.அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் செவ்வாய்,சுக்கிரன்,சனி சாதகமாக நின்று பல்வேறு நன்மைகளை தருவார்கள்.மேலும் 16-ந் தேதி வரை சூரியனும் அதன்பிறகு புதனும் நன்மை தருவார்கள். மற்றய கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் இல்லை. எனவே காரிய அனுகூலம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாகும்.பக்தி உயர்வு மேம்படும்.
குருபகவான் இதுவரை மனநிம்மதியை இழக்க செய்திருப்பார். தடுமாறத்தை உண்டுபண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண்பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். இந்த நிலையில் 13-ந் தேதி குரு 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்- களுக்கு உயர்வை தருவார்.
குடும்பம்:தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும்.புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.16-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.1,27,28-ந் தேதிகளில் பெண்களால் மிகுந்த பலனை எதிர்பார்க்கலாம். 6,7-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.ஆனால் 22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்
உத்தியோகம்: கோரிக்கை நிறைவேறும். புதிய பதவி கிடைக்கும். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். மாத பிற்பகுதியில் அரசு ஊழியர்கள் பிரச்சினையில் இருந்து விடுபடுவர். 19,20,21-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரிகள்:பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். அதிக லாபம் கிடைக்க பெறுவர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய தொழில் வெற்றியை தரும்.அரசு வகையில் இருந்த பிரச்சினை 16-ந் தேதிக்கு பிறகு மறையும். அது வரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு பெண்களிடம் விரோதம் ஏற்படும்.சற்று ஒதுங்கி இருக்கவும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 10,11-ந் தேதிகளில் எதிர் பாராதவகையில் லாபம் கிடைக்க பெறுவர். 24,25,26,29,30-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிற தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
கலைஞர்கள்:புகழ் பாராட்டு கிடைக்கும்.புதிய ஒபப்பந்தம் வரும்.பொதுநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தில் இருப்பர். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு 13-ந் தேதிக்கு பிறகு பின்தங்கிய நிலை இருக்காது. முன்னேற்றம் காண்பர்.ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். போட்டிகளில் சிறந்து விளங்குவீர்கள்.
விவசாயிகள் வருவாய்க்கு குறை இருக்காது.பாசிபயறு,நெல்,எள்,சோளம், பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். 16-ந் தேதிக்கு பிறகு கால் நடை செல்வம் பெருகும்.வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
பெண்கள்: குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். 13-ந் தேதிக்கு பிறகு பல்வேறு முன்னேற்றங்களை காணலாம்.நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம். 4,5-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். 12,13,14-ந் தேதிகளில் சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர்.
உடல் நலம்: சிறப்பாக இருக்கும்..8,9,17,18-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். வயிறு பிரச்சினைவரும். 15,16-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 1,5 அதிர்ஷடம் தரும் எண்கள்.வெள்ளை, மஞ்சள் யோகம் தரும் நிறங்கள்.1,4,5,10,11,12,13,14,19,20,21,22,23,27,28ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: துர்க்கை வழிபாடு உங்கள் மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.16-ந் தேதிக்கு பிறகுதினமும் காலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் 17-ந் தேதி சூரியன் சாதகமான இடத்திற்கு வருகிறார். மேலும் மாதம் முழுவதும் சுக்கிரன்,கேது நன்மை தருவார்கள். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். காரியம் அனுகூலம் அடையும். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. மதிப்பு மரியாதை சிறப்படையும். அவப்பெயர் மறையும்.
குருவால் குடும்பம் மேம்பட்டிருக்கலாம். நல்ல பணப்புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் எண்ணற்ற முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் 13-ந் தேதி குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிடவாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம்.
குடும்பம்: மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும்.16-ந் தேதிக்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். பெண்களால் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். குறிப்பாக 2,3,29,30-ந் தேதிகளில் அவர்கள் உதவி அதிகம் கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கப்பெறலாம்.6,7-ந் தேதிகளில் அவர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.ஆனால் 24,25,26-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்: சீரான நிலையில் காணப்படுவர். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.வேலைப்பளு இருக்கும்.சற்று முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி மறையும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு,வீண் மனக்கவலை முதலியன 16-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 22,23-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம்.
வணிகம்:முன்னேற்றம் காணலாம்.ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.16-ந் தேதிக்கு பிறகு வீண்விரயம் இருக்காது. லாபம் சிறப்பா இருக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.எதிரிகளின் இடையூறுகள் அவ்வப்போது வந்தாலும் அதனால் பாதிப்புகள் இருக்காது.ஆனால் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 12,13,14-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 1,4,5,27,28-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிறப்பான வருமானம் இருக்கும். சமூகநல சேவகர்கள் நற்புகழை பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெறலாம். 10,11-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்-காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.16-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயிகள்:உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை கிடைக்க பெறலாம். 16-ந் தேதிக்கு பிறகுபசு வளர்ப்பவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள்: சிறப்பான பலனை காணலாம்.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.16-ந் தேதிக்கு பிறகு சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.சற்று ஒதுங்கி இருக்கவும் வேலைக்கு செல்லும் பெண்கள்உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அனுசரித்து போவது நல்லது 15,16-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பணம் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும்.16-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான நோய் குணமாகும்.19,20,21-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.வயிறு தொடர்பான உபாதை வரலாம்.17,18-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருக்கவும்.தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும்.
அதிர்ஷ்டம்: 6,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை,16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும்.2,3,6,7,12,13,14,15,16,22,23, 24,25,26,29,30 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு: தினமும் முருகனை தரிசனம் செய்து ஏழைகளுக்கு மொச்சை தானம் செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபட்டலாம். முடிந்தால் ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள். புதன்கிழமை குலதெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். 13-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.அப்போது மஞ்சள் ஆடை தானம் கொடுக்கலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் தொடர்ந்து நற்பலனை கொடுப்பார். குரு13-ந் தேதி சாதகமான இடத்துக்கு மாறுகிறார். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் அனைத்தும் 13-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். காரிய அனுகூலம் எளிதாகும்.
குரு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார்.உறவினர்களிடையே வீண்விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டு இருக்கும்.தூரத்து உறவினர் வகையில் விரும்பதகாத சம்பவங்களும் நடந்து இருக்கலாம். இந்தநிலையில் 13-ந் தேதி குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார்.இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.
குடும்பம்: சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்சனை,உறவினர்கள் வகையில் மனக்கிலேசம், பொருள் இழப்பு முதலியன16-ந் தேதிக்கு பிறகு மறையும். 4,5-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அதேநேரம் 27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் ஒற்றுமை மேம்படும். அவர்களால் முன்னேற்றம் காணலாம்.
உத்தியோகம்:தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். புதனால் 16-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். 24,25,26-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வணிகம்: வியாபாரம் செய்வோர் முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகம் கிடைக்கும். பகைவர்கள் வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் 13-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.2,3,6,7-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 15,16-ந் தேதிகளில் எதிர்பராத வருவாய் கிடைக்கும்.
பொதுநலம்: கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொது தொண்டில் இருப்பவர்கள் மதிப்பு, மரியாதை கிடைக்கப்பெறுவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அசட்டையாக இருந்து விட வேண்டாம்.13-ந் தேதிக்கு பிறகு முன்னேற்றம் காண்பர்.ஆசிரியர்களின் ஆலோசனையையும் அறிவுரையையும் கேட்டு பெறவும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்: இன்று விதை விதைத்தால் நாளை தானே பலனை பெற முடியும். அதை மனதில் ஏற்று உழையுங்கள். பின்னாளில் அதற்கு பலன் கிடைக்கும். தற்போது கொண்டைக்கடலை, மஞ்சள்,காய்கறிகள், கீரை வகைகள், மொச்சை போன்ற பயறு வகைகளில் அதிக வருமானம் கிடைக்கும். கால்நடை வகையில் சிறப்படையலாம். புதியசொத்து வாங்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள்: மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 13-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 17,18-ந் தேதிகளில் சகோதரிகளால் பொன், பொருள் கிடைக்கும்.8,9-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து உதவி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
உடல்நலம்: அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.16-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம். 12,13,14,22,23-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 19,20,21-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 2,8 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள். வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 1,4,5,8,9,15,16,17,18,24,25,26,27,28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட நாட்கள் ஆகும்.
வழிபாடு: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள்.புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். தினமும் காலைமாலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் அகலும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன்,சனி சாதகமாக காணப்- படுகிறார்கள். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
குருவால் உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் 13-ந் தேதி குரு 4-ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலையும், உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்
குடும்பம்: சுக்கிரனால் மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.பண வரவு இருக்கும். கணவன்-மனைவி இடையே சந்தோஷமும் ஆனந்தமும் இருக்கும். சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக 6,7-ந் தேதிகளில் அவர்களால் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும்.2,3,29,30-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 12,13,14-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.16-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.
உத்தியோகம்: சுக்கிரனால் கோரிக்கைகள் நிறைவேறும்.சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 16-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அனுசரித்து போவது நல்லது. சிலர் இடமாற்றம் காணலாம். 1,27,28-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள்: அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். 16-ந் தேதிக்கு பிறகு நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம். எனவே அவர்கள் பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது. குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேறம் அடையலாம்.பணப்புழக்கம் நன்றாக இருக்கும் 4,5,8,9ஆகிய தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். 17,18-ந் தேதிகளில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெற்று புகழ், பாராட்டு கிடைக்க பெறுவர். சிலர் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். பொது தொண்டில் இருப்பவர்களுக்கு அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையிலேயே இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் கிடைக்கும். 15,16-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையையும் அறிவுரையையும் கேட்டு பெறவும்.
விவசாயிகள் சீரான பலனை எதிர்நோக்கலாம். பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற கால தாமதம் ஆகலாம். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். தேவைகள் பூர்த்தியாகும். கணவரின் அன்பு கிடைக்கும். 10,11-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். 19,20,21-ந் தேதிகள் சிறப்பானதாக அமையும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.16-ந் தேதிக்கு பிறகு எந்த ஒரு முக்கிய காரியத்தையும் தீர சிந்தித்த பிறகே தொடங்க வேண்டும்.வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பிள்ûள்கள் வகையில் எதிர்பார்த்த பயன் கிடைக்காது.
உடல் நலன்: செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம். 16-ந் தேதிக்கு பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.24,25,26-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும். பண விஷயத்தில் கவனம் தேவை. 22,23-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். வயிறு தொடர்பான உபாதை வரலாம்
அதிர்ஷ்டம்: 4,6 யோகம் தரும் எண்கள்.வெள்ளை, கறுப்பு அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். 1,2,3,6,7,10,11,17,18,19,20,21,27,28,29,30. ஆகிய தேதிகள் அனுகூலத்தை தரும் நாட்கள் ஆகும்.
வழிபாடு: பெருமாள் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். சூரியனையும் வழிபட தவறாதீர்கள். முருகன் கோவிலுக்கு சென்று துவரை தானம் செய்தால் உடல் நலம் சிறப்படையும்.ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் குரு 13-ந் தேதி வரையிலும், சூரியன், புதன் 16-ந் தேதி வரையிலும் நன்மை கொடுப்பார்கள்.மேலும் செவ்வாய்,சுக்கிரன்,ராகு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. மதிப்பு, மரியாதை இருக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
இதுவரை குருவால் உங்களை எதிர்த்தவர்கள் சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகிஇருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து இருக்கும். வணிகம் நல்ல லாபத்தைக் கொடுத்து இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மனநிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள்.சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். இந்த நிலையில் 13-ந் தேதி குருபகவான் 3-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடிநன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும்.
குடும்பம்: பெண்களின் ஆதரவு உண்டு. அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.16-ந் தேதிக்கு பிறகு அண்டை வீட்டார் வகையில் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். 4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதேநேரம் 15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். 8,9-ந் தேதிகளில் சகோதரிகள் மூலம் முன்னேற்றம் காணலாம். 12,13,14-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்கலாம்.
உத்தியோகம்:அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க தடை ஏதும் இல்லை. போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். 2,3,29,30-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். 16-ந் தேதிக்கு பிறகு இடமாற்றம்வர வாய்ப்பு உண்டு. அதிகமாக போராடியே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.
வியாபாரம்: வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த இடர்பாடுகள் தடைகள் மறையும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 16-ந் தேதிக்குபிறகு யாரிடமும் பார்த்து பழகவும்.அலைச்சல் இருக்கும். 6,7,10,11-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.19,20,21-ந் தேதிகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
கலைஞர்கள்:சிறப்பான நிலையில் இருப்பர்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறலாம். புகழ் பாராட்டு கிடைக்க பெறலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது
மாணவர்கள்:முன்னேற்ற நிலையில் காணப்படுவர். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். மாதபிற்பகுதியில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள்: உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். நெல், சோளம், கேழ்வரகு, பாசிபயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, மஞ்சள் போன்ற பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள்: உங்களால் குடும்பம் சிறப்படையும். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் .வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.22,23ஆகிய தேதிகளில் உன்னத பலனை காணலாம்.சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம்.
உடல்நலம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். 24,25,26-ந் தேதிகளில் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும் 17,18,27,28-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். மனக்குழப்பம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள்3,7 ஆகியவை ஆகும். வெள்ளை, சிவப்பு ,நீலம் 16-ந் தேதி வரை செந்தூரம்,பச்சை ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும். 2,3,4,5,8,9,12,13,14,19,20,21,22,23,29,30. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்16- ந் தேதிக்கு பிறகு தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். புதனுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன், புதன்,கேது ஆகிய கிரகங்கள் சாதகமாக காணப்படுகின்றன. நினைத்த காரியம் நிறைவேறும். தேவையான பொருட்கள் கிடைக்கும். வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.16-ந் தேதிக்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குருவால் குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில் 13-ந் தேதி குருபகவான் 2-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம் .பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குடும்பம்: பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நகைகள் வாங்க வாய்ப்பு கூடி வரும்.10,11-ந் தேதிகளில் சகோதரிகளால் பண உதவி கிடைக்கும் 6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 17,18-ந் தேதிகளில் அவர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
உத்தியோகம் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 16-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 4,5-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரம்: நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய தொழில் வளர்ச்சி அடையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 16-ந் தேதிக்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசின் உதவி கிட்டும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். சந்திரனால் 8,9,12,13,14-ந் தேதிகளில் சிறு,சிறு தடைகள் வரலாம். 22,23-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும்.
கலைஞர்கள்: காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பது அரிது.அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் முன்னேற்றமான பலனை காணலாம்.
மாணவர்கள்: புதனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.போட்டிகளில் வெற்றி காணலாம்.13-ந் தேதிக்கு பிறகு காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்: வருமானம் அதிகரிக்கும். கொண்டைக்கடலை, மஞ்சள், நெல்,பாசி பயறு உளுந்து மற்றும் கிழங்கு வகைகள் போன்ற பயிர்கள் சிறப்பை தரும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கலாம். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்: மகிழ்ச்சியுன் காணப்படுவர். குடும்பத்தில் உங்கள் தேவை அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குருவால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 22,23 ஆகிய தேதிகளில் உன்னத பலனை காணலாம். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.15,16-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம்.
உடல்நலம்: செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. 19,20,21,29,30-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 1,27,28-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள் 5,6 ஆகியவை ஆகும். பச்சை, செந்தூரம் ஆகியவை அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 4,5,6,7,10,11,15,16,22,23,24,25,26. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள் முருகன் வழிபாடு உங்கள் வளத்தை அதிகரிக்கும்.திருச்செந்தூர் முருகனையும் வழிபடலாம்.. நாக தேவதையை வணங்கி வாருங்கள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் 17-ந் தேதி சூரியன், புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார்கள். மேலும் சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார்.16-ந் தேதிக்கு பிறகு தடைகள் படிப்படியாக விலகி காரிய அனுகூலம் எளிதாகும். பின்தங்கிய பொருளாதார நிலை சீர்படும். பண வரவு கூடும். வசதிகள் அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும்.
குரு பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.சிலரது வாழ்க்கையில் துக்ககரமான சம்பவமும் நிகழ்ந்து இருக்கலாம். இந்த நிலையில் 13-ந் தேதி குரு உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது.
குடும்பம்:சுக்கிரனால் வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். சூரியன், புதனால் 16-ந் தேதி வரை மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொருள் சேரும். சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.குறிப்பாக 27,28-ந் தேதிகளில் அவர்களால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். 8,9-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 19,20,21-ந் தேதிகளில் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 16-ந் தேதி வரை வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.அதன்பிறகு வேலைப்பளு குறையும். சிலர் பதவி உயர்வு கிடைக்க பெறுவர். செல்வாக்கு, அந்தஸ்து கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்: வருமானம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கும்.13-ந் தேதிக்கு பிறகு தங்கம், வெள்ளி,வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். புதிய வியாபாரம் அனுகூலம் அடையும். லாபம் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 16-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். 10,11,15,16-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.24,25,26-ந் தேதிகளில் எதிர்பாராத வருவாய் கிடைக்கும்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.புகழ் பாராட்டுக்கு தடை ஏதும் இல்லை. பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் சிறப்பு அடைவர்.
மாணவர்கள்: வளர்ச்சி காணலாம். ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். 16-ந் தேதிக்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை .கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பர்.
விவசாயம்: விளைச்சல் நன்றாக இருக்கும். நெல், பாசிபயறு, மஞ்சள்,சோளம், கரும்பு போன்ற பயிர்களில் நல்ல மகசூலை காணலாம். 16-ந் தேதிக்கு பிறகு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் முன்னேறத்துடன் காணப்படுவீர்கள்.சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். 13-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். அக்கம் பக்கத்தினர் மிகவும் உதவிகரமாக இருப்பர். கணவனோடு விருந்து விழா என்று சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும்.17,18-ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள் வரப்பெறலாம்.12,13,14-ந் தேதிகளில் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். உஷ்ணம், பித்தம் தொடர்பான உபாதைகள் குணம் அடையும்.பயணத்தின் போது சற்று கவனம் தேவை.2,3,29,30-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும். 4,5-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.22,23-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டம்: 2,4 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, பச்சை அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 1,6,7,8,9,12,13,14,17,18,24,25,26,27,28.ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம். செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். மாத முற்பகுதியில் சூரியன், ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.

மீனம்

மீனம் ராசி அன்பர்களே! இந்த மாதம் குரு 13-ந் தேதி வரையும், புதன் 16-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும் சனி, ராகு மாதம் முழுவதும் நன்மை தருவார்கள்.அவர்களால் பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை தந்து கொண்டு இருக்கிறார்கள்.
குரு இதுவரை 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். குறிப்பாக புதிய பதவியும், சம்பளஉயர்வும் கிடைத்திருக்கும். வேலையில் திருப்தி கண்டிருப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக இருந்திருக்கும். பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிந்திருப்பீர்கள். இப்படி பல்வேறு நன்மைகளை தந்த குருபகவான்13-ந் தேதி உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும்.
குடும்பம்: வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். புத்தாடை அணிகலன் கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 15,16-ந் தேதிகளில் அவர்களால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். 10,11-ந் தேதிகளில் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மை கிடைக்கும். அதே நேரம் 22,23ஆகிய தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.16-ந் தேதிக்கு பிறகு சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும்.
உத்தியோகம்: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்துசேரும். புதனின் அருளால் சிலர் புதியபதவி கிடைக்க பெறுவர். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் மாதத் முற்பகுதியில் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை. 8,9-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.16-ந் தேதிக்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
வணிகம்: நஷ்டம் தவிர்க்கப்படும்.தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். அரசுவகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு 16-ந் தேதிக்கு பிறகு மறையும்.அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.12,13,14,17,18-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். அதே நேரம் 1,27,28-ந் தேதி சந்திரன் எதிர்பாராத பணவரவை தருவார்.16-ந் தேதிக்கு பிறகு தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
பொதுநலம்:கலைஞர்களுக்கு எதிரிகளால் தொல்லைகள்அதிகரிக்கும்.அவப்பெயர் உருவாகலாம். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சுமாரான பலனை காண்பர். சற்று சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்
விவசாயம்: காய்கறிகள், கீரை, பழவகைகள், பயறு வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.16-ந் தேதிக்கு பிறகு பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
மாணவர்கள்: நல்ல வளர்ச்சியை காணலாம். ஆசிரியரிடம் நற்பெயரை எடுப்பர். 16-ந் தேதிக்கு பிறகு சிலர் தீய மாணவர்களோடு சேர்ந்து கெட்டப் பெயர் எடுக்க வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.
பெண்கள்: உங்கள் கை ஓங்கி இருக்கும்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.பொன்,பொருள் கிடைக்கும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். தோழிகள் மிக உறுதுணையாக இருப்பர். கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் அனைவராலும் போற்றபடுவீர். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்சினை மறையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதன் உயர்வை தருவார். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 15,16-ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். உல்லாச பயணம் மேற்கொள்ளலாம். 19,20,21-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். 6,7,24,25,26-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.4,5-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் நேரத்தை செலவிடவும்.
அதிர்ஷ்டம்: 5,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். நீலம், கறுப்பு நலம் தரும் நிறம்.1,2,3,8,9,10,11,15,16,19,20,21,27,28,29,30. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு:தினமும் சூரியதரிசனம் செய்து ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள்.16-ந் தேதிக்கு பிறகுபுதன் கிழமை குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.