தமிழகத்தில் இன்று 720 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு
1 min readCorona for 720 people in Tamil Nadu today; 9 deaths
30.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 730 ல் இருந்து 720 ஆக சற்று குறைந்துள்ளது. 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 758 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,00,048 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன.அதில், தமிழகத்தில் 718 பேரும் பீகார் மாநிலத்திலிருந்து வந்த 2 பேர் உள்பட 720 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,26,917 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 426 பேர் ஆண்கள்,294 பேர் பெண்கள். இன்று 758 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,82,192 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 9 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,481 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.30 ம் தேதி) 115 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 109 பேருக்கும், ஈரோட்டில் 69 பேருக்கும், திருப்பூரில் 61 பேருக்கும், செங்கல்பட்டில் 53 பேருக்கும், நெல்லையில் 9 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும், கன்னியாகுமரியில் 8 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று இல்லை.