தமிழகத்தில் இன்று 8,981 பேருக்கு கொரோனா; 8 பேர் சாவு
1 min readCorona for 8,981 people in Tamil Nadu today; 8 people death
7.1.2022
தமிழகத்தில் இன்று 8,981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 984 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 8,981 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,36,292 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 8,944 பேர், ஐக்கிய அரபு எமிரேட் 5, சிங்கப்பூர் 3, அமெரிக்கா -1, மேற்குவங்கம் 17, பீகார் 5, அசாம் 2, ஆந்திரா, டில்லி, மராட்டியம் மற்றும் ஜார்கண்டில் இருந்து வந்த தலா ஒருவரையும் சேர்த்து மொத்தம் 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,76,413 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதியானவர்களில் 5,238 பேர் ஆண்கள், 3,743 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 721 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,08,763 ஆக உயர்ந்துள்ளது.
8 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 8 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,833 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,759 ஆக இருந்த நிலையில் இன்று 4,531 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 1039 பேருக்கும், திருவள்ளூரில் 514 பேருக்கும், கோவையில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 257 பேருக்கும், வேலூரில் 216 பேருக்கும், தூத்துக்குடியில் 160 பேருக்கும், மதுரையில் 149 பேருக்கும், திருப்பூரில் 127 பேருக்கும், கன்னியாகுமரியில் 117 பேருக்கும், திருநெல்வேலியல் 104 பேருக்கும், ஈரோட்டில் 103 பேருக்கும், ராணிப்பேட்டையில் 113 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையி்ல் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை. செங்கல்பட்டில் 3 பேருக்கும், கோவையில் 2 பேருக்கும், கரூர், திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.