May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா எதிரொலி: கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு விலக்கு

1 min read

Corona Echo: Exemption for pregnant and disabled employees

9.1.2022
கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய இணை மந்திரி ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி

கொரோனா அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசுப்பணியில் உள்ள கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில், பணி நேரத்தில் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டல பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.

துணை செயலர்கள் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50 சதவீதம் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவதுடன், எஞ்சிய 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும். சுழற்சி முறையில், இது அமல்படுத்தப்படும். இருப்பினும், வீடுகளில் இருந்து பணிபுரிவோர், தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். அலுவல் கூட்டங்கள் கூடிய மட்டும் காணொலி மூலம் நடத்தப்பட வேண்டும்.
பார்வையாளர்களுடனான சந்திப்புகளை, மிகவும் தேவையாக இருந்தால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். பணியிடங்கள் சானிடைசர் தெளித்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் ஜனவரி 31 வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.