May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை என தெரியாமல், பெண் குழந்தை பிறக்கும் என்ற பயத்தில் இளம்பெண் தற்கொலை

1 min read

Unaware as the baby boy was in the womb, Teen commits suicide for fear of giving birth to baby girl

9.12022

வயிற்றில் இருந்தது ஆண் குழந்தை என தெரியாமல் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்பம்

தெலுங்கானா மாநிலம் மன்செரியால் நகரில் உள்ள என்.டி.ஆர். நகர் காலனியில் வசித்து வந்தவர் ரம்யா(வயது 26) வயதான இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

கூட்டுக்குடும்பமாக வசித்து வரும் அவர் 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு ஜனவரி முதல் வாரம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.

தற்கொலை

ரம்யாவுக்கு ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விரும்பம் இருந்தது. எனவே 2-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடக்கூடாது என்று தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வந்தார்.

அதற்கு அவர்கள் எந்த குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை. பெண் குழந்தை பிறந்தால் நல்லது தான் என்று கூறி வந்தனர். என்றாலும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று ரம்யா பயத்துடன் இருந்து வந்தார்.

நாளுக்கு நாள் அவரது பயம் அதிகரித்தது. பெண் குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பயம் அதிகரித்ததால் கடந்த 5-ம் தேதி அவர்வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது அவரது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வயிற்றில் ஆண் குழந்தை

பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதை உணராமல் ரம்யா தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை கதற வைத்தது.

அவர் தற்கொலை செய்யும் முன்பு தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று விரிவான கடிதம் எழுதி வைத்திருந்தார். இதனால் போலீசார் அவர் குடும்பத்தினரிடம் விசாரணை மட்டும் நடத்தினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.