May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி

1 min read

Corona vaccine injected through the nose; Permission for Phase 3 testing

28.1.2022

மூக்கு வழியாக செலுத்தும் வகையிலான கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.

அனுமதி

இந்த நிலையில், பாரத் பயோடெக் உருவாகியுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கியுள்ளது. மூக்குவழியாக செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசாக பயன்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 9 இடங்களில் இந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற உள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு 3-வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூக்கு வழியாக செலுத்தப்பட்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

3-ம் கட்ட சோதனைக்கு பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூக்குவழியாக செலுத்த மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுப்பதுடன், சுகாதாரத்துறை பணியாளர்களின் வேலைப்பளு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.