தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கொரோனா; 38 பேர் சாவு
1 min readCorona for 22,238 people in Tamil Nadu today; 38 deaths
30.1.2022
தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். 26,624 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 24,418 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 22,238 ஆக குறைந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,36,952 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 22,238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,25,940 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,16,24,216 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 13,251 பேர் ஆண்கள், 8,987 பேர் பெண்கள். தமிழகத்தில் 26,624 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,84,470 ஆக உயர்ந்துள்ளது.
38 பேர் சாவு
தமிழகத்தில் 38 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,544 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,508 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 30 ம் தேதி) 3,998 ஆக குறைந்துள்ளது
கோவையில் 2865 பேருக்கும், செங்கல்பட்டில் 1534 பேருக்கும், ஈரோட்டில் 1127 பேருக்கும், சேலத்தில் 1181 பேருக்கும், திருப்பூரில் 1497 பேருக்கும், நெல்லையில் 404 பேருக்கும், தென்காசியில் 251 பேருக்கும், தூத்துக்குடியில் 217 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.