May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆகஸ்டு மாதம் ‛சந்திரயான்-3′ விண்ணில் பாய்கிறது; மத்திய அரசு தகவல்

1 min read

Chandrayaan-3 launches in August; Federal Government Information

3.2.2022
சந்திரயான்-3 விண்கலம் வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சந்திராயான்-2

நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவில் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியது. அதேசமயம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டரானது நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவுசெய்தது. ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரயான்-3 வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று மத்திய அரசு, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.