இந்தியாவில் மேலும் 1,72,433 பேருக்கு கொரோனா; 1,008 பேர் சாவு
1 min readCorona for another 1,72,433 in India; 1,008 deaths
3/2/2022
இந்தியாவில் ஒரே நாளில் இந்தியாவில் மேலும் 1,72,433 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதே நேரம் ஒரு நாளில் 2.59 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,008 பேர் மரணமடைந்தனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,18,03,318 ஆனது. கடந்தஒரு நாளில் 2,59,107 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,97,70,414 ஆனது. தற்போது 15,33,921 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா காரணமாக ஒரு நாளில் 1,008 பேர் மரணமடைந்தனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,98,983 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 167.87 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 55,10,693 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 9,692 ஆக உயர்ந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.