இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 13,405 பேராக குறைந்தது; 235 பேர் சாவு
1 min readDaily corona exposure in India drops to 13,405; 235 deaths
22/2/2022
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. ஒருநாளில் 13,405 பேர் தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 16,051 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,405 ஆயிரமாக குறைந்தது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,81,075 ஆக குறைந்தது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.24 சதவீதம் ஆக உள்ளது.
நேற்றும் ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 34,226 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 21 லட்சத்து 58 ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு சற்று அதிகரித்தது. நேற்று 206 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்தம் இதுவரை 1,75,83,27,441 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 35.50 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 84 ஆயிரத்து 287 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.