ஒரே பேரூராட்சியில் ஒரே குடும்பத்தில் 5 பேர் வெற்றி
1 min read5 people in the same family win in the same municipality
23.2.2022
பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சியில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
இந்த பேரூராட்சியில் ஒரே குடும்பத்தில் 5 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
அ.தி.மு.க. வெற்றி
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சியில் தேர்தலில் பதிவான வாக்கு பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுப்புடன் எண்ணப்பட்டது.
ஆரம்பம் முதலே அதிமுக வெற்றி கணக்கை தொடங்கியது. மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 13 வார்டுகளில் அண்ணா திமுக வினர் வெற்றி பெற்றனர்.
ரவிச்சந்திரன்
இதனை அடுத்து பேரூராட்சி தலைவராக பேரூர் அதிமுக செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் பதவியேற்க உள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி
அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் ஏ,ஜி.ரவிச்சந்திரன் 16வது வார்டில் வெற்றி பெற்றார். அவரது மனைவி தவமணி 13வது வார்டில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். அவரது அணணன் ஜீவாணந்தம் 10 வார்டிலும், தம்பி மோகங்குமார் 4வது வார்டிலும் அவரது மனைவி திளகவதி 18வது வார்டிலும், வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.