ஆலங்குளம் பேரூராட்சியை கைப்பற்ற கடும் போட்டி
1 min read3 parties compete to capture Alangulam municipality
24.2.2022
ஆலங்குளம் பேரூராட்சியில் சுயேட்சைகள் ஆதிக்கத்தால் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் 3 கட்சியினர் போட்டி போட்டு வருகின்றனர்.
ஆலங்குளம் பேரூராட்சி
ஆலங்குளம் பேரூராட்சியில் சுயேட்சைகள் ஆதிக்கத்தால் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
இங்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியும், தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. இதில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதுதவிர சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.
பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க மெஜாரிட்டிக்கு 8 கவுன்சிலர்கள் தேவை. இதனால் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகியவை பதவியை பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர்.
அவர்கள் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு வலை விரித்துள்ளனர். அதில் சிலரை தி.மு.க. தரப்பினரும், சிலரை அ.தி.மு.க. தரப்பினரும் அழைத்து சென்றுள்ளனர்.
மறைமுக தேர்தல் நடைபெறும் வரை குற்றாலம், சென்னை போன்ற இடங்களில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு ரூ.15 முதல் ரூ.25 லட்சம் வரை குதிரை பேரம் பேசப்பட்டு வருவதாக அப்பகுதி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.