May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 14,148 பேருக்கு கொரோனா; 302 பேர் சாவு

1 min read

Corona for 14,148 newcomers in India; 302 deaths

4/2/2022

இந்தியாவில் தினசரி கொரோனா 14,148 பேராக குறைந்தது. 302 பேர் இறந்துள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 15,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,148 ஆக குறைந்தது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.22 சதவீதம் ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 359 ஆக குறைந்தது.

நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 30 ஆயிரத்து 9 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 22 லட்சத்து 19 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவிலிருந்து மீள்வோர் விகிதம் 98.46 சதவீதமாக உள்ளது.

302 பேர் சாவு

கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 278 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 302 ஆக உயர்ந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்தம் இதுவரை 176.52 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 30.49 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 417 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.