உக்ரைன் சென்ற இந்திய விமானம் பாதியில் திரும்பியது
1 min readThe Indian flight to Ukraine returned halfway
24.3.2022
உக்ரைனில் இந்தியர்களை மீட்க சென்ற ஏர் இந்தியா விமானம் போர் தொடங்கியதால் தரையிறங்காமல் திரும்பி உள்ளது.
விமானம்
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
அதன்படி உக்ரைனுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.
இதனை அடுத்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. முக்கியமாக, கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷிய ராணுவம் ஈடுபட்டுள்ளன.
திரும்பியது
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது.
முன்னதாக மாணவர்கள் உள்பட 182 இந்தியர்களை ஏற்றி கொண்டு உக்ரைனின் கீவ் நகரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று காலை 7.45 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்து உள்ளது.