June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 20 people in Tamil Nadu today

4.4.2022

தமிழகத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 20 ஆயிரத்து 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 263 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 18-வது நாளாக இன்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் 33 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *