June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகள் ‘சஸ்பெண்டு’

1 min read

24 hijab students ‘suspended’ in Karnataka

7/6/2022

கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகாவில் உள்ள உப்பினங்கடியில் இருக்கும் கல்லூரியில் 24 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தினர் உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்தனர். இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது.

ஹிஜாப்பிரச்சினை

கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மாநில அரசும், கர்நாடகா ஐகோர்ட்டும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் மத அடையாள ஆடைகளை அணியக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது.
புத்தூர் தாலுகாவில் உள்ள உப்பினங்கடியில் இருக்கும் கல்லூரியில் 24 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தினர் உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்தனர். இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. ஒரு வாரம் அவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *