May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,359 people in Tamil Nadu today

24.6.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 24 ம் தேதி) ஒரே நாளில் 1,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழக கொரோனா குறித்த விவரங்களை, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (ஜூன் 24) 25,896 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 616; செங்கல்பட்டு 266; திருவள்ளூர் 71,கோவை 64 , கன்னியாகுமரி 62, காஞ்சிபுரம் 50, மதுரை 26; திருச்சி 14 , திருநெல்வேலி 29, தூத்துக்குடி 19, ராணிப்பேட்டை,16, சேலம் 11; திருப்பூர் 10, தேனி 9 , கிருஷ்ணகிரி 8, கடலூர் மற்றும் சிவகங்கை 7 , திருவண்ணாமலை, விருதுநகர் 6, வேலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை 5, விழுப்புரம், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் 4, திருவாரூர், நாமக்கல் தர்மபுரி,தஞ்சாவூர் 3, கரூர் 2; ராமநாதபுரம், திருப்பத்துார், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் திண்டுக்கல் , அரியலுார்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டஙகளில் பாதிப்பு எதுவுமில்லாமல் மொத்தம் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,65,490 ஆக அதிகரித்துள்ளது. இன்று 621 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,21,552 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (23 ம் தேதி) 497 ஆக இருந்த நிலையில் இன்று (24ம் தேதி)சென்னையில் 616 ஆக அதிகரித்துள்ளது
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,678 ல் இருந்து 5,912 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.