May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

1 min read

Red alert for Nellai, Kumari, Tenkasi districts.. Chance of heavy rain for 3 days

1.8.2022
கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதால், வானைலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கூடுதலாக தேனி மாவட்டத்திற்கும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்பொழுது அதி தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவ்தற்காக, சாலை மார்க்கமாக தேசிய பேரிடர் மீட்பு படை நான்கு குழுவினர் விரைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து தமிழகத்தின் தென்மேற்கு பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும், நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும் விரைந்துள்ளனர்.

7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஆகிய 7 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக கன மழைக்கு வாய்ப்பு:

தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. குப்பணம்பட்டியில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல், சித்தம்பட்டியில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. வீரபாண்டி, பெருந்துரை, வைகை அணை, நீலகிரியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. மதுரை தெற்கு, திருமங்கலம், பொன்மலை, பெருஞ்சாணி அணை, களியல் பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.