May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

ரூ.29.75 கோடியில் புதிய கட்டிடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min read

New buildings at Rs 29.75 crore: M. K. Stalin inaugurated

1.8.2022
தொழிற்பயிற்சி நிலையம்-வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரூ.29.75 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார் அந்த வகையில், உடுமலைப்பேட்டையில் ரூ.5.56 கோடி செலவில் புதிதாககட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தங்கும் விடுதி, நாகர்கோவில் (மகளிர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டெக்னீசியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ற புதிய தொழிற் பிரிவிற்கு ரூ.72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறைக் கட்டடம், விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கு ரூ.2.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறைக் கட்டடம், திருச்சிராப்பள்ளி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு ரூ.99 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறைக் கட்டடம், கோயம்புத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாதிரி தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி அறைகள், நூலகம், பணியமர்த்தும் அலுவலகம் ஆகிய கட்டடங்கள், சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் ரூ.3.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் (பொது), சென்னை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம் மற்றும் ஆதி திராவிடர்/பழங்குடியினருக்கான தேசிய தொழில்நெறி சேவை மையக் கட்டடங்கள், மதுரை (மகளிர்), தூத்துக்குடி, நாகலாபுரம், நாமக்கல், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.14.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.29.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசீமுத்தின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.