தமிழகத்தில் இன்று 1,302 பேருக்கு கொரோனா
1 min readToday, 1,302 people are infected with Corona in Tamil Nadu
2.8.2022
தமிழகத்தில் இன்று 1,302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1,302 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 46 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,734 ஆகும். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 97 ஆயிரத்து 079 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 032- ஆக நீடிக்கிறது. தலைநகர் சென்னையில் இன்று 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.