அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே பரபரப்பு கடிதம் “அதிகார போதை கண்ணை மறைக்கிறது, மறந்து விட்டீர்கள?”
1 min readAnna Hazare’s sensational letter to Arvind Kejriwal “The intoxication of power blinds the eye, have you forgotten?”
30.8.2022
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் “அதிகார போதை கண்ணை மறைக்கிறது, மறந்து விட்டீர்கள?” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னா ஹசாரே
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளதாவது:-
நீங்கள் டெல்லி முதல்-மந்திரியான பிறகு நான் உங்களுக்கு முதல் முறையாக கடிதம் எழுதுகிறேன். ஏனென்றால் உங்கள் அரசு மதுபானக் கொள்கை குறித்த சமீபத்திய செய்திகளால் நான் வேதனைப்படுகிறேன். டெல்லி அரசிடம் இருந்து இப்படியொரு கொள்கையை நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல்-மந்திரியான பிறகு, லோக்பால் லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள். சட்டசபையில், ஒரு முறை கூட லோக் ஆயுக்தாவை கொண்டு வர முயற்சி செய்யவில்லை.
இப்போது, உங்களின் அரசு மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையை கொண்டு வந்துள்ளது. இது ஒன்றே போதும், உங்களின் வார்த்தைகளும், செயல்பாடுகளும் வெவ்வேறு என்பதை காட்டுகிறது.
ஊழல்
மராட்டியத்தில், மதுபான கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது. ஆனால், இன்று டெல்லி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்த முயன்று, அதனால் ஊழலில் சிக்கி உள்ளது. டெல்லியில் மூலைமுடுக்கு எல்லாம் மதுபான கடைகள் முளைத்து விட்டது. ஒரு பேரியக்கத்தில் விளைந்த ஒரு கட்சிக்கு இதுவெல்லாம் ஒரு அழகா. நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள். “நீங்கள், மணீஷ் சிசோடியா மற்றும் பிறரால் உருவாக்கப்பட்ட” ஆம் ஆத்மி கட்சியை “இப்போது வேறு எந்தக் கட்சியிலிருந்தும் வித்தியாசமாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.