May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களை திருப்பி அழைத்துச் செல்ல சிறப்பு குழு அமைத்தது

1 min read

A special committee was set up to take back refugees who came to India

6.9.2022
அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அழைத்துச் செல்ல இலங்கை அரசு சார்பில் சிறப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அகதிகள்

இலங்கையில் நடந்த கடுமையான உள்நாட்டுப் போர் காரணமாக அங்கிருந்து லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் படகுகளில் இந்தியாவிற்கு அகதிகளாக தப்பி வந்தனர். இதில் தமிழகத்தில் சுமார் 68 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவிற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அழைத்துச் செல்ல இலங்கை அரசு சார்பில் சிறப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபரின் செயலாளர் சமன் ஏகனாயகே இந்த குழுவை நியமித்துள்ளார். அதிபரின் சிறப்பு செயலாளர் சந்திமா விக்கிரமசிங்கே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள், குடிவரவுத்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.