மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது
1 min readLaborer arrested for sexually harassing daughter for 4 years
5/9/2022
ஆலங்குளத்தில், மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்
பாலியல் தொல்லை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர், என்னுடைய 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, கூறி இருந்தார்.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி மற்றும் போலீசார், அந்த 13 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 4 ஆண்டுகளாக… அந்த கூலித்தொழிலாளி தனது மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் மகளை பாலியல் தொந்தரவு செய்து வந்தார். மேலும் அந்த சிறுமியிடம் இதுபற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். அவ்வப்போது குடித்து விட்டு வந்தும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியின் தந்தையான அந்த கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.