இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் விடுதலை
1 min read
12 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy released
20.9.2022
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை திரிகோணமலை கோர்ட்டு விடுதலை செய்தது.
மீனவர்கள்
காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 6ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை திரிகோணமலை கோர்ட்டு விடுதலை செய்தது.