June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியா வேறு நாட்டிலிருந்து பாடம் கற்க வேண்டியதில்லை: ப.சிதம்பரம், சசி தரூர் கருத்துகளுக்கு காங்கிரஸ் கண்டனம்

1 min read

India does not need to learn from other countries: Congress condemns P Chidambaram, Sasi Tharoor comments

25.10.2022
இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியா வேறு நாட்டிலிருந்து பாடம் கற்க வேண்டியதில்லை எனறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ப.சிதம்பரம்

இங்கிலாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர், பாஜகவை தாக்கி டுவிட்டரில் பதிவிட்டனர். இந்தியாவில் பாஜக ஆட்சியில் பெரும்பான்மைவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவி வருவதாக கூறப்படுவதை சுட்டிக்காட்டி, இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் தெரிவித்த கருத்துக்கள் அமைந்தன.
சிறுபான்மையினரை உயர்பதவியில் தேர்ந்தெடுப்பதில், இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட முன்மாதிரியை இந்தியா பின்பற்ற வேண்டும். ஒரு நாள் இந்த நடைமுறை நம் நாட்டில் பின்பற்றப்படும் என நம்புகிறோம் என்று அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், சசி தரூர், சிதம்பரத்தின் கருத்துகளுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா வேறு எந்த நாட்டிலிருந்தும் பாடம் கற்க வேண்டியதில்லை. இந்தியாவில் கடந்த காலத்தில் பல சிறுபான்மையினர் ஜனாதிபதியாகவும் முதல்-மந்திரிகளாகவும் பதவி வகித்துள்ளனர். பன்முகத்தன்மையை மதிப்பது பல ஆண்டுகளாக இந்தியாவின் அடையாளமாக இருந்து வருகிறது.ஜாகீர் உசேன், பக்ருதீன் அலி அகமது மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோர் பல ஆண்டுகளாக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உயர் பதவியில் இருந்தனர். நம் நாட்டில், டாக்டர் ஜாகிர் உசேன் சிறுபான்மையினர் பிரிவில் முதன்முதலில் 1967-ல் ஜனாதிபதியானார், பிறகு பக்ருதீன் அலி அகமது ஜனாதிபதியானார், டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியானார்.
பர்கத்துல்லா கான் முதல்வரானார், ஏ ஆர் அந்துலே முதல்வரானார். மற்ற தலைவர்கள் கூறியதை பற்றி நான் பேசமாட்டேன். காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. பாரதிய ஜனதா கட்சி எதேச்சதிகாரத்தை பரப்புகிறது. பாரத் ஜோடோ யாத்திரை ஜனநாயகத்தை பரப்புகிறது. ஜனநாயக ரீதியில், ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், எங்களுக்கு பிரச்னை இல்லை. இங்கிலாந்து ஆளும்கட்சி ரிஷி சுனக்கை பிரதமராக்கியுள்ளது, அதை வரவேற்கிறோம்.கடந்த எட்டு ஆண்டுகளில் நாம் இந்தியாவில் பார்த்ததை பற்றி கூறினால், நாம் வேறு எங்கிருந்தோ பாடம் கற்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நமது சமூகம் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறது.நாங்கள் பன்முகத்தன்மையை மதிக்கிறோம் மற்றும் அவர்களுக்கு சம உரிமைகளை வழங்குகிறோம்.பன்முகத்தன்மை மூலம் நமது சமூகம் வலுப்பெறும். நாம் பன்முகத்தன்மையை அடக்கி, ஒரே தேசம் ஒரே மொழி போன்ற என்ற ஒற்றுமையைக் கொண்டுவர முயற்சித்தால், நம் சமூகத்தை வலுப்படுத்த முடியாது. வேற்றுமையின் மூலம் மட்டுமே ஒற்றுமையாக இருப்போம். பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் இது மட்டுமே. பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் பல்வேறு மொழிகள், சாதிகள் மற்றும் மதங்களை ஒன்றிணைப்பதாகும். அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடியின் எண்ணங்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் தான் மோடி ஆட்சியின் கடைசி 8 ஆண்டுகள் இவ்வாறு உள்ளன.
நேரு காலத்தில் உருவானவர் வாஜ்பாய், ஜவஹர்லால் நேருவால் வாஜ்பாய் மிகவும் ஈர்க்கப்பட்டார், அதுதான் உண்மை. ஆனால், ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியத்தை எப்படி அழிப்பது என்பதில் மட்டும் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *