தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
1 min readNortheast Monsoon has started in Tamil Nadu
29.10.2022
தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் நவம்பர் 4-ந் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. வருகிற நவம்பர் 1-ந் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்பின், நவம்பர் 4-ந் தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் குறைந்து, பின்னர் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது