May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

தேசத்திற்காக முத்துராமலிங்க தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன் – பிரதமர் மோடி டுவிட்

1 min read

Remembering Muthuramalinga Devar’s great contribution to nation – PM Modi Dwitt

30.10.2022
முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

தேவர் ஜெயந்தி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.
இந்த நிலையில், முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு,விவசாயிகள் நலன்,வறுமை ஒழிப்பு என தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.