May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

வாலாஜா அருகே 39 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

1 min read

39 bags of ration rice seized near Walaja

13.11.2022
டோல்கேட் அருகே மினிவேனில் கடத்தி செல்லப்பட்ட 2 டன் அளவிலான 39 மூட்டை ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார்பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர் .

ரேஷன் அரிசி

வாலாஜா டோல்கேட் அருகே மினிவேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் தலைமையில் குழுவினர் வாகன சோதனை ஆய்வு மேற்கொண்டபோது, ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்வதற்காக மினிவேனில் எடுத்து வரப்பட்ட 2 டன் அளவிலான 39 ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக ரேஷன் அரிசி மூட்டைகளை மற்றும் டாடா ஏசி வாகனம் பறிமுதல்
செய்த குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை வாலாஜா நுகர்ப்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் பதுக்கலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாசில் என்பவரை கைது செய்த போலீசார் வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.