மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் தொழிலதிபர் தற்கொலை
1 min readBusinessman commits suicide after giving birth to twin girls
20.1.2023
2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் தொழிலதிபர் ஆற்றி்ல் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெண் குழந்தை
மத்தியபிரதேச மாநிலம் பலஹட் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் வாசுதேவ் பாட்லி. இவருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். தொழிலதிபரான வாசுதேவ் பாட்லிக்கு திருமணமாகி 6 மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே, பாட்லியின் மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.
அவருக்கு கடந்த புதன் கிழமை இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவிக்கு மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் வாசுதேவ் மிகுந்த விரக்தி அடைந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில், மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இருந்து வாசுதேவ் புதன்கிழமை மாலை 7 மணியளவில் வனிகங்கா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட வாசுதேவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலதிபர் வாசுதேவிற்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது என்றும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்சிங் தெரிவித்தார்.