பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதில் சொல்ல தயாராக இல்லை-ஈ வி கே எஸ் இளங்கோவன் பேட்டி
1 min readBJP leader not ready to answer Annamalai- EVKS Ilangovan interview
30/1/2023
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்
எஸ்டிபிஐ கட்சி
எஸ்டிபிஐ கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் நேற்று அவர் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று அவர்ஆதரவு கோரினார் அதை அடுத்து எஸ்டிபிஐ கட்சியினர் அவருக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தனர். இதை அடுத்து இளங்கோவன் ஆதரவளிக்க முன் வந்த எஸ்டிபிஐ கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமாக பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது குறித்து கேட்டதற்கு அது பற்றி எனக்கு தெரியாது ஆனால் அவருக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்றார்
முதல்வர்
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கட்சி கூட்டணிகளில் பல்வேறு கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன் அதையும் வெட்டியும் ஒட்டியும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார்கள் அதை நான் பொருட்படுத்தவில்லை
முதல்வர் ஓய்வின்றி செயல்படுகிறார் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவார் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குவார்.
குஜராத்தில் சிறுபான்மையினர்கள் படுகொலை குறித்த ஆவணப்படம் பிபிசி வெளியிட்டுள்ளது ஏற்கனவே நாங்கள் பிரதமர் மோடி தான் இதற்கு காரணம் எனக் கூறியுள்ளோம்
இதேபோன்று எங்கள் தலைவர் ராகுல் காந்தி அதானி நிறுவனத்தின் ஊழல்கள் குறித்து கூறியுள்ளார் அதைத்தான் இப்போது அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது எனது தாத்தா பெரியார் தந்தை சம்பத் எனது மகன் திருமகன் ஈரோட்டின்வளர்ச்சிக்கு பல பணிகளை ஆற்றி உள்ளனர் அவர்கள்விட்டு சென்ற பணிகளை செய்வதற்கு தான் போட்டியிட ஒப்புக்கொண்டேன் கலெக்டர் ஆக இருந்தவர் துணைதாசில்தார் ஆக பணியாற்றுவது போல இபபோட்டியிடுவதை கருதலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை கலெக்டராக இருந்தாலும் அலுவலக உதவியாளராக இருந்தாலும் மக்கள் பணியாற்றுவதுதான் முக்கியம் என்பதாலேயே போட்டியிடுகிறேன்.
இதே போன்று சட்டமன்றத்திலும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவரின் கீழ் மக்கள் பணியாற்றுவேன் எனக்கு பதவி முக்கியமல்ல.
இவர் அவர் கூறினார்.