இந்தியாவில் புதிதாக 5,357 பேருக்கு கொரோனா
1 min read5,357 new cases of corona in India
9.4.2023
இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 5,357 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 203 நாட்களில் இல்லாத அளவில் கடந்த வெள்ளிக்கிழமை பாதிப்பு 6,049 ஆக அதிகரித்தது. சனிக்கிழமை 6,155 ஆக உயர்ந்த நிலையில், இனறு பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகபட்சமாக கேரளாவில் 1,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் 542, டெல்லியில் 535, அரியானாவில் 399, தமிழ்நாட்டில் 329, கர்நாடகாவில் 321, குஜராத்தில் 260, இமாச்சல பிரதேசத்தில் 258, உத்தரபிரதேசத்தில் 188, ராஜஸ்தானில் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரத்து 837 பேர் மீண்டுள்ளனர். இதில் நேற்று குணமடைந்த 3,726 பேரும் அடங்குவர். தற்போது 32,814 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது முந்தைநாளை விட 1,620 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் குஜராத்தில் 3 பேர், இமாச்சலபிரதேசத்தில் 2 பேர், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என நேற்று 10 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட இறப்பு 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.