கேரளாவில் ரூ.21 லட்சம் மோசடி செய்த பெண் தபால் அதிகாரி கைது
1 min readFemale postal officer arrested for fraud of Rs 21 lakh in Kerala
9.4.2023
கேரளாவில் வைப்புத்தொகை ரூ.21 லட்சம் மோசடி செய்த பெண் தபால் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
தபால் அதிகாரி
கேரள மாநிலம் பள்ளிபுரம் பாம்பம்தாரா அருகே உள்ள மாராரிகுளம் பகுதியில் தபால் அலுவலகம் உள்ளது. இங்கு தபால் அதிகாரியாக பணியாற்றியவர் அமிதாநாத் (வயது 29). இந்த தபால் நிலையத்தில் ஏராளமானோர் கணக்கு வைத்து பணம் கட்டி வருகின்றனர்.
இந்த பணத்தை தபால் அதிகாரி அமிதாநாத் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இது பற்றி நடந்த விசாரணையில் வைப்பு தொகையாக பெறப்பட்ட பணத்தில் ரூ.21 லட்சத்தை அமிதாநாத் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு தனது கையெழுத்தில் போலி கணக்கு எண்களை கொடுத்து அவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். மோசடியாக பணம் சேர்த்து அமிதாநாத் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.
கைது
குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாராரிகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தபால் அதிகாரி அமிதாநாத்தை கைது செய்தனர்.