தென்காசியில் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
1 min readCivil servants protest in Tenkasi
8.6.2023
தென்காசியில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ்பூசனை கைது செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முரு கன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப் பினர் வெங்கடேஷ், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சண் முகசுந்தரம், அனைத்து மருந்தக சங்க மாநில பொதுச்செயலாளர் சண் முகம், வேலை வாய்ப்பு துறை ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி, அரசு தொழிற்பயிற்சி அலு வலர் சங்க நெல்லை மண் டல செயலாளர் சேகர், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜசேகர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோபிநாத், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில துணைத்த லைவர் ராதாகிருஷ்ணன், நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் பால சுப்பிரமணி யன், மகளிர் துணை குழு அமைப்பா ளர் செல்வி, மல்லிகா, சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகி யோர் பேசினர். மாவட்ட செயலாளர் துரைசிங் நிறைவு உரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.