தென்காசியில் ரயில் பாதை கண்காணிப்பு தீவிரம்
1 min readIntensification of track monitoring in Tenkasi
8.6.2023
ஒடிசா ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக
தென்காசி ரயில்வே நிலைய எல்லைகள், தண்டவாள பகுதிகள் மற்றும் மேம்பாலம் அருகிலும் நாசவேலைகள் ஏதும் நடைபெறாத வகையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் செந்தில்குமார், மதுரை இரயில்வே உட்கோட்ட திருநெல்வேலி டி.எஸ்.பி பொன்னுச்சாமி, திருநெல்வேலி ரயில்வே வட்டம் காவல் ஆய்வாளர் செல்வி ஆகியோர் உத்தரவுப்படி தென்காசி இரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் கற்பக விநாயகம் மற்றும் காவல் அதிகரிகள் ஆளிநர்களுடன் தென்காசி இரயில்நிலைய பகுதியில் பாதுகாப்பு குறித்த சோதனையில் ஈடுபட்டனர்.
தென்காசி ரயில்வே காவல் நிலைய எல்லைகள், தண்டவாள பகுதிகள் மற்றும் மேம்பாலம் அருகிலும் நாசவேலைகள் ஏதும் நடைபெறாத வகையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் சகிதம் தண்டவாள ரோந்து அலுவல் புரிந்தும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது