குற்றாலம் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
1 min readArrested under Criminal Youth Gangster Prevention Act
9.6.2023
குற்றாலம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் காரில் லிப்ட் கேட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் குற்றவாளியான கணேசன் என்ற முனிய கணேசன் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது பல வழக்குகள் இருப்பதால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் ஏற்றுக்கொண்டு கணேசன் என்ற முனிய கணேசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து கணேசன் என்ற முனிய கணேசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி சமர்பித்தார்.