தோரணமலையில் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை
1 min readLast Friday Special Pooja at Thoranamalai
9.6.2023
கடையம் தோரணமலையில் வைகாசி மாத கடைசி வெள்ளியை யொட்டி இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே எழில்மிகு தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தாக்ள் வந்து செல்கிறார்கள். தமிழ்மாத கடைசி வெள்ளி தோறும் சிறப்பு பூஜை நடைபெறும்.
அதன்படி வைகாசி மாத கடைசி வெள்ளியாக இன்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு மலை மீதுள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல் அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
இதனை அடுத்து உற்சவர்களாக வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக உற்சவர்கள் த.பி.சொக்கலால் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டனர். பக்தர்கள் மலை மீதுள்ள சுனையி்ல் இருந்து புனித நீர் கொண்டு வந்திருந்தனர். அதைக் கொண்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதை அடுத்து சிறப்பு பூஜை நடந்தது. விவசாயம் செழிக்க இந்த பூஜை நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு காலையில் சிற்றுண்டியும், மதியம் அன்னதானமும் நடந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.