ஜார்க்கண்டில் மொகரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
1 min read4 killed in electric shock at Mogaram procession in Jharkhand
29.7.2023
ஜார்க்கண்டில் மொகரம் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலியானார்கள்.
மொகரம்
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி அருகே உள்ள பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில் மொகரம் ஊர்வலம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் அந்த கிராமத்து இளைஞ்சர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் இரும்பிகளில் கொடிகளை கட்டி வந்தனர்.
அந்த கொடிமேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியது. இதனால் கொடி வைத்திருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
4 பேர் சாவு
இதில் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.