தென்மாவட்ட மக்களுக்கு முதல் அமைச்சர் புதிய சலுகை
1 min readThe Chief Minister’s new offer to the people of South District
30.12.2023
பெருமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் வெள்ள நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
- சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிறப்பு கடன் திட்டம்
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 350 கோடி ரூபாய் கடன் உதவி.
- நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு.
- சேதம் அடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட 385 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- 2.64 லட்சம் ஹெக்டேர் பயிர் சேதத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 3 லட்ச ரூபாய் வரை கடனுதவி திட்டம்.
- மீன்பிடி படகுகளுக்கு 15 கோடி ரூபாய் வரை நிவாரண தொகை ஒதுக்கீடு.