May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கருங்குளம் பகுதியில் அய்யாத்துரை பாண்டியன் வெள்ள நிவாரண உதவி

1 min read

Dr. S. Ayyathurai Pandyar flood relief assistance in Karunkulam area

30.12.2023

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் ச.அய்யாத்துரை பாண்டியர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட
ஆழிகுடி, முத்தாலன் குறிச்சி கிராம மக்களுக்கு
அரிசி, பருப்புகளை கொண்ட வெள்ள நிவாரண பொருள்களை அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் ச.அய்யாத்துரை பாண்டியர் வழங்கினார்

இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கடம்பூர் செ.ராஜு தலைமை தாங்கினார். கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள் முன்னிலை வகித்தார்.
அஇஅதிமுக கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் டாக்டர்.ச.அய்யாத்துரைப் பாண்டியர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில்
அஇஅதிமுக கிளை கழக செயலாளர் மந்திரம்
கருங்குளம் ஒன்றியம் 10-வது வார்டு கவுன்சிலர்
சுடலைமுத்து ஆழிகுடி ஊராட்சி மன்ற தலைவர்
தினேஷ் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பழனிச்சாமி, பசும்பொன்,பேச்சிமுத்து, பூலோகராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாககலந்து கொண்டனர்

அதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
கருங்குளம் ஒன்றியம் முத்தாலன்குறிச்சி கிராம மக்களுக்கு
அரிசி, பருப்புகளை கொண்ட வெள்ள நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கடம்பூர் செ.ராஜு தலைமை தாங்கினார். கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர்
லட்சுமண பெருமாள் முன்னிலை வகித்தார்.
அஇஅதிமுக கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர்
டாக்டர்.ச.அய்யாத்துரைப் பாண்டியர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில்
அஇஅதிமுக கிளை கழக செயலாளர்,முத்தாலன் குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன்
கருங்குளம் ஒன்றியம்
10-வது வார்டு கவுன்சிலர்
சுடலைமுத்து மற்றும்
காவல்துறை (ஓய்வு)
பழனிச்சாமி, பசும்பொன்,
பேச்சிமுத்து,பூலோகராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.