விளயைாடும்போது கத்தரிகோல் குத்தி கல்லூரிமாணவர் பலி
1 min readCollege student killed by scissors while playing
31.12.2023
சோளிங்கர் அடுத்த கல்லாளங்குளத்தில் கத்தரிகோல் மார்பில் குத்தி கல்லூரிமாணவர் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர. அடுத்த கல்லாளங்குளம்இராமஜெயம. எல்ஐசி ஏஜன்ட் அவரது மனைவி வீட்டிலேயே துணி தைத்து வருகிறார் , அவர்களுக்கு மகள் ,2 மகன்கள் அதில் மூத்தமகன் சுனில்19) கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வீட்டிலுள்ள கட்டிலில் சுனில் அமர்ந்து தனது தம்பி,தங்கையுடன் விளையாடி கொண்டிருந்தபோது திடிரென கட்டிலிலிருந்து சுனில் விழுந்தார் அப்போது கீழேயிருந்த கத்தரிக்கோல் துரதிர்ஷ்டவசமாக அவரது மார்பில் குத்தியது . அதில் பலத்த காயமடைந்து வலியால் துடித்த அவரை சிகிச்சைக்காக அருகிலுள்ள சோளிங்கர்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர் சுனில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார் அதனைக்கேட்ட அவனது பெற்றோர் கதறி அழுதக் காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது .மேலும் இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற கொண்டபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் . இதற்கிடையே வீட்டில் தம்பி தங்கையுடன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொணடிருந்தபோது கத்தரிக்கோல் குத்தி கல்லூரிமாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது