இலஞ்சி ஆர்.பி.பள்ளி மாணவிக்குகலை இளம் மணி விருது
1 min readArt Young Mani Award to Ilanchi RB School Girl
5.1.2024
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பாக அனைத்துமாவட்டங் களிலும் அகவை மற்றும் கலைப் பண்பிற்குத் தகுந்தவாறு கலைத்துறை யில் சேவை மற்றும் சாதனை புரிந்தோரை கண்டறிந்து ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது
அதன்படி 2022 _2023 ஆண்டிற்கான கலை இளம் மணி விருதுக்கு சிறந்த இளம் ஓவியக் கலைஞர் விருது இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலை ப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவி நிலோபர் தேர்வு பெற்றிருந்தார்.
இவர்களுக்கான விருது வழங்கும் விழா சங்கரன் கோவிலில் நடைபெற்று வரும் பொதிகை புத்தகத் திருவிழா வின் நிறைவு விழாவில் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா தலைமை தாங்கினார். வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார் முன்னிலை வகித்தார்
கலை பண்பாட்டுத் துறை அலுவலர் கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்
துரை இரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவி நிலோபர்க்கு
கலை இளம் மணி விருதும் ரொக்கப் பரிசாக ரூ.4000 ஆயிரமும் வழங்கி பாராட்டினார்.
கலை இளம்மணி விருது பெற்ற மாணவியை தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா,பள்ளிச்செயலர் சண்முகவேலாயுதம், தலைமை ஆசிரியர் கே.ஆறுமுகம் , ஓவிய ஆசிரியர் கணேசன் , நல்லாசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் வாழ்த்தினார்கள்.
சென்ற ஆண்டு இதே பள்ளி மாணவி பூர்ணிமா இதே விருதினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.