ரூ.2 கோடிக்கு லஞ்சம்- மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை
1 min readBribe of Rs.2 Crore- 3 years imprisonment for central government official
13.1.2024
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2007- 2009ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர் பணிபுரிந்தார்.
சேகர் மீது, குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் பெற்று அதில் சொத்துக்கள் வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.