கீழப்பாவூர் பேரூராட்சியில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா
1 min readInauguration of community welfare center in Geezapavur municipality
28.2.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி 3வது வார்டு மூலக்கரையூரில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் பங்கேற்று, திறந்து வைத்து பேசினார்.
இவ்விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோடிஸ்வரன்,மாலதி முருகேசன், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ்,ஜேஸ்மின் யோவான், விஜி ராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவஅன்பு, பொன்செல்வன், முன்னாள் பேரூராட்சி தலைவர்பொன்.அறிவழகன், பேரூர் செயலாளர் ஜெகதீசன், மற்றும் தங்கச்சாமி, பொன்.கணேசன், சுடலைஈசன்,சிவன், காளிமுத்து, ராமகிருஷ்ணன், பெரியசாமி, சிவன், கணேசன், தேவேந்திரன், குத்தாலிங்கம், மலைச்சாமி, மாரிச்செல்வம், ரமேஷ், இசக்கிமணி, தமிழ்ச்செல்வன், முருகன் பேரூராட்சியின் இளநிலை பொறியாளர் திமாரியப்பன், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.