June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆந்திராவில் பா.ஜ.க. தனித்து போட்டி

1 min read

BJP in Andhra Pradesh A separate competition

4.3.2024
ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க வலியுறுத்தியது. அதற்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு 94 வேட்பாளர்களையும், ஜனசேனா கட்சிக்கு 24 இடங்களையும் ஒதுக்கி வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்தது.

ஆந்திர மாநிலத்தில் கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். தெலுங்கு தேசம் கட்சியுடன் தொகுதி பங்கீடு நிறைவடையாத நிலையில் ஆந்திர மாநிலத்தில் தனித்துப் போட்டியிட பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை மாநில தலைமை முடிவு செய்து வைத்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சாத்தியமான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யபட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் 5 பேர் வரை தேர்வு செய்யபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2,000 பேர் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர்.

வேட்பாளர் இறுதிப்பட்டியல் கட்சி மேலிடத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *