May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆட்டோ மீது கல்வீசிய நபருக்கு ஓராண்டு சிறை

1 min read

A person who threw stones at an auto gets one year in jail

12-3.2023
தென்காசி அருகே ஆட்டோ மீது கல்லெறிந்து ஆட்டோவை விபத்துக்கு உள்ளாக்கி ஆட்டோ டிரைவரை படுகாயம் அடையச் செய்த நபருக்கு தென்காசி நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி பண்ணைய தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன்
மாரியப்பன் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 31.10.2012 அன்று தனது ஆட்டோவை மதுரை- கொல்லம் மெயின் ரோட்டில் தென்காசி நோக்கி வரும் பொழுது பேருந்துக்காக காத்திருந்த சிவராமப்பேட்டை அம்மன் கோவில் கோவில் தெருவை சேர்ந்த பண்டாரம் முப்புடாதி மகன் துரை (வயது 34) என்பவர் ஆட்டோவை நிறுத்த முயன்று உள்ளார் . ஆனால் ஆட்டோ நிற்கவில்லை .

இதனால் ஆத்திரமடைந்த துரை கல்லெடுத்து ஆட்டோவை ஓட்டிச் சென்ற மாரியப்பன் மீது
எறிந்துள்ளார் . ஆட்டோ மீது கல் விழுந்ததால் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற மாரியப்பன் படுகாயம் அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து ஆய்க்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து துரையை கைது செய்தனர் .

இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி அனுராதா வழக்கை விசாரணை செய்து துரைக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 3000 அபராதமும் அபராதம் செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.