May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே கொய்யாப்பழ வெடிகுண்டு வெடித்து 2 ஆடுகள் பலி

1 min read

2 goats killed in guava bomb explosion near Sankarankoil

24.4.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வனவிலங்குகளை வேட்டையாட காட்டுப்பகுதிகளில் கொய்யாப்பழத்தில் வெடிமருந்து வைத்த நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள் அந்த கொய்யாப்பழத்தை கடித்து தின்ற போது இரண்டு ஆடுகளின் வாய் வெடித்து சிதறியது. அதில் ஒரு ஆடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மற்றொரு ஆடு ஆபத்தான நிலையில் உள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் மேல கண்மாய் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது .அப்போது கன்மாய் பகுதியில் கிடந்த கொய்யாப்பழத்தை இரண்டு ஆடுகள் கடித்துத் தின்ற போது இரண்டு ஆடுகளின் தலை, வாய் வெடித்து சிதறியது. இதில் ஒரு ஆடு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பலியானது. மற்றொரு ஆடு முகம் சிதறிய நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது.

கண்மாய் பகுதியில் மான், காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் அதிகளவில் இருப்பதால் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக
கொய்யாப் பழங்களில் நாட்டு வெடிகுண்டை மர்ம நபர்கள் வைத்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு வைத்த கொய்யாப் பழங்களை மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள் கடித்து தின்றதால் இரண்டு ஆடுகளின் தலை சிதறி அதில் ஒரு ஆடு உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொய்யாப்பழ வெடிகுண்டை மனிதர்கள் மிதித்து இருந்தால் கூட வெடித்து சிதறி உயிர்பலி ஏற்பட்டு இருக்கும்

சங்கரன்கோவில் பகுதியில் பல இடங்களில் இது போல் வனவிலங்குகளை வேட்டையாட கொய்யாப்பழ வெடிகுண்டுகளை பயன்படுத்தும் சமூக விரோதிகள் மீது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்றும் சமூக விரோதிகள் வைத்த வெடிகுண்டுக்கு பலியான ஆடுகளின் உரிமையாளர் முருகனுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.