May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்

1 min read

Nellie: Complaints about irregularities in the deed registry office

24.4.2024
நெல்லை மண்டலத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல பதிவு துறை துணை ஐ.ஜி.யிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

நெல்லை மண்டல பதிவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்
காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்யக்கோரி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல பதிவு துறை துணை ஐ.ஜி.யிடம் புகார் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதாக பத்திரபதிவு செய்ய வரும் பயனாளிகளும். சமூக ஆர்வலர்கள். மற்றும் பத்திரபதிவு எழுத்தர்கள் கூறிய புகார்களை தொடர்ந்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி ஆலோசனையின் படி திருச்செந்தூர் தாலுகா ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சிந்திக் தலைமையில் ஆயுள் கால உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதனால் எந்தவித நடவடிக்கையும், தீர்வும் இதுவரை எடுக்கப்படாததால் நெல்லை மண்டல பத்திரப்பதிவு ஐ.ஜியிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு திருச்செந்தூர் தாலுகா ஒருங்கினைப்பாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில் ஆயுள்கால உறுப்பினர்கள் சேர்ந்து தங்களது கோரிக்கை மனுவை நேரில் கொடுத்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட நெல்லை மண்டல பத்திரப்பதிவு ஐ.ஜி 30.04.24 அன்றுகாயல்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத் திற்கு நேரில் வந்து கள ஆய்வு செய்து அங்கு காணப்படும் குறைகள் இயன்றவரை சட்டத்திற்கு உட்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.